Skip to content
Home » திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

  • by Senthil

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சவாமி, உச்சி பிள்ளையார் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  இந்த நிலையில் இன்று காலை  கோயிலுக்கு செல்லும் பாதையில், திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். திருச்சியில் பலத்த மழையும் பெய்யாயத நிலையில் எப்படி அங்கு திடீர் வெள்ளம் வந்தது என விசாரித்தபோது, அருகில்

உள்ள சறுக்குப் பாறை பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி மாதம்தோறும் சுத்தம் செய்யயப்படுவது வழக்கம் அந்த வகையில் இன்று சுத்தம் செய்வதற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு இருந்ததால் தண்ணீர் வெளியேறி  கோயிலுக்கு செல்லும் பாதையில்  வழிந்து ஓடியது என தெரியவந்தது.  உடனடியாக இதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!