Skip to content
Home » திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் வார சந்தைகள் ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதை கண்டித்து சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் தண்ணீர் அருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிழக்குறிச்சி வார்டு எண் 4 மங்கம்மா சாலை வண்டிப்பாதையை சுமார் 90 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டியும் கிழக்கு குறிச்சி வார்டு எண் 3 நத்தமாடிப்பட்டியில் உள்ள இடத்தில புதிய ரேஷன் கடை வேண்டியும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் வார சந்தைகள் ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதையும் கண்டித்து இன்று திருச்சி மாவட்ட சாமானிய மக்கள் நலக் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக தண்ணீர் அருந்தா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சாமானிய மக்கள் நலக் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சைனி மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் திருச்சி ரமணா, தமிழ்நாடு விவசாய சங்கம் தலைவர் சின்னதுரை, சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட துணை செயலாளர் தனபால், அம்பேத்கர் பெரியார் சமூக நீதி பாசறை அமைப்பாளர் அரூண் மாசிலாமணி,விவேகானந்தன் ,சாமானிய மக்கள் நலக் கட்சி பொறுப்பாளர்கள் கோகிலா தவமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!