Skip to content
Home » காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

  • by Senthil

திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் விளைவித்திடும் வகையில் செயல்படும். ஒன்றிய  பா.ஜ.க.அரசினை கண்டித்தும், தண்ணீா் தர மறுக்கும் கர்நாடகத்தை கண்டித்தும்  காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாத்திடவும் சம்பா சாகுபடி துவங்கிட ஏதுவாக உடனே காவிரியில் மாத வாரியாக வழங்கிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தியும்  காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் காவிரி டெல்டா மாவட்டகளில் நாளை  (புதன்கிழமை) அன்று முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி மத்திய,வடக்கு மாவட்டத்தில் முழு கடையடைப்பும் மற்றும் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் மறியல் அறப்பேராட்டமும் நடைபெறவிருகிறது. காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள இந்த முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு நமது மத்திய,வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட, மாநகர மற்றும் அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் விவசாய தொழிலாளர்சங்கங்கள், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாத்திட உறுதியுடன் போரட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!