Skip to content
Home » டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார கடை நடத்தி வந்தவர் அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் கடைவீதி பகுதிக்கு சென்று விட்டு திருச்சி நாமக்கல் சாலையில் சென்றபோது திருச்சி நோக்கி வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிகழ்வவிடத்திலேயே பரமன் உயிரிழந்தார். இத்தகவலறிந்த சீனிவாசநல்லூர் பகுதி மக்கள் திருச்சி நாமக்கல் சாலையில்

 

விபத்துக்குள்ளான லாரியை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் இருந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை விபத்தில் இறந்த பரமன் சடலத்தை தொட்டியம் போலீசார் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!