Skip to content
Home » திருச்சி வரகனேரி மஸ்ஜிதே உமர் (ரலி) பள்ளிவாசல் சார்பில் முப்பெரும் விழா..

திருச்சி வரகனேரி மஸ்ஜிதே உமர் (ரலி) பள்ளிவாசல் சார்பில் முப்பெரும் விழா..

திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள மஸ்ஜிதே உமர்(ரலி) பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் அன்னை ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரலி) பெண்கள் அரபுக்கல்லூரியின் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, இமாம் அபு ஹனீஃபா மத்ரஸாவின் 17ம் ஆண்டு விழா, மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவாக.முன்னாள் செயலாளர் ஏ எம் எச் அப்துல் அக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதில்தலைவர் ராஜா

முஹம்மது ,துணைத் தலைவர் நசுருதீன், துணைச்செயலாளர் ஷாகுல்ஹமீது, நிர்வாகி அப்துல் மாலிக்,இமாம் ரப்பானி,கல்லூரி முதல்வர் பாசி நைனார் முஹம்மது,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டி பி எஸ் எஸ் ராஜ் முஹம்மது வரவேற்புரை ஆற்றினார்,

சிறப்பு அழைப்பாளராக நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின்பேராசிரியர் முகமது அபுதாஹிர்,கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் ரஹமத்துன்னிசா, பாத்திமா ஹீஸைனா, ரஹத்,ஆகிய மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார் மேலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும்,வழங்கப்பட்டது. இவ்விழாவின் முடிவில் பள்ளிவாசல் செயலாளர் முஹம்மது உசேன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!