Skip to content
Home » திருச்சியில் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்…..

திருச்சியில் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்…..

  • by Senthil

திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெங்கடேசப் பொருமாள் திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த திருக்கோயிலின் முலவர் மற்றும் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் வெங்கடேச பெருமாள் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர்.

பெருமாளுக்கு இடது பக்கம் லஷ்மி நாராயணரும் வலது பக்கம் அலமேல் மங்கை தாயாரும் காட்சி அளிக்கின்றனர். முலஸ்தானத்தில் ஸ்ரீசக்ரதாழ்வாரும் வீற்றீருந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மாதம் தோறும் பெள்ர்ணமி திருவோண நட்சத்திர நாளில் திருமஞ்சனம் நடைபெறும்.
சிறப்பு அபிஷேகம்

ஆண்டு தோறும் ஆடிமாதம் பெள்ர்ணமி திருவோணம் சேர்த்து வரும்நாள் அன்று சிறப்பு மஹா திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நேற்று செவ்வாய்கிழமை மஞ்சள் பொடி, திருமஞ்சனபொடி, தேன் ,பால் ,தயிர் ,இளநீர், பழவகை, பழரசம் ,சந்தனம் போன்ற திரவியகளால் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம், அர்ச்சனை மஹாதீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு தீர்த்தம், துளசி சடாரி சாதித்து பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமண தடை நீங்கும்
இந்த கோயிலில் பெருமாள் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். திருமண தடை நீங்க ஜாதகத்தை சாமியின் திருவடியில்

வைத்து அர்ச்சனை செய்து வர திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும் என்பது இக்கோயிலின் நம்பிக்கை.
மேலும் லஷ்மி நாராயணரை வணங்கி வர பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கி ஓற்றுமையாக வாழ இந்த கோவிலில் வந்து வணங்கினால் போதும் என்பது நம்பிக்கை.

மாணவர்களுக்கு ஞாபக சக்தி
மாணவர்கள் புதன்கிழமைகளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வர கல்வியில் ஏற்படும் தடை நீங்கி நல்ல ஞாபக சக்தியும் நல்ல மதிப்பெண்ணும் பெறுவார்கள். மேலும் இந்த கோவிலில் உள்ள சக்கரதாழ்வரை வழிபட்டு வர பில்லி சூன்யம் மாத்தீரீகம் பயம் தொடர்பான கோளாறு நீங்கி வாழ்வில் நிம்மதி உண்டாகும்.

தொழில் தடை நீங்கவும் நல்ல வேலை அமையவும் தாயாருக்கு வெள்ளிகிழமைகளில் வாசனை புஷ்பம், மல்லிகை, முள்ளை, ஜாதி புஷ்பம், மஞ்சள் பொடி வைத்து அர்ச்சனை செய்தால் தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும் நல்லவேலை வாய்ப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பெருமாள் தாயாருடன் திருவீதிஉலா நடைபெறும். 25 வருடங்களுக்கு மேலாக வாரம்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை இங்கு வரும் பக்தர்கள் ஓன்றுகூடி ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய திருச்சி மட்டுமல்லாது அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்தும் கூட வந்து மக்கள் சாமி தரிசனம் செய்தனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!