திருச்சி விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரில் 230 சிலைகளும், புறநகரில் 950 சிலைகளும் என 1,180 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வருகிற பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வரும் 20ம் தேதி பிற்பகல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. திருச்சி மாநகரில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் . இதற்கான ஏற்பாடுகளை நாளை முதல் காவல் துறையினர் செய்வார்கள்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் அவல், பொரி, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. இன்றும் காலையில் இருந்து மக்கள் விநாயகர் சிலை, மற்றும் பூஜை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.