Skip to content
Home » திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

  • by Senthil

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் வார சந்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதனால் மாநகராட்சிக்கு இழப்பு உடனடியாக வார சந்தை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுவரை மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் கொடுத்தும். இன்று வரை எந்த வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொன்மலை மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை சாமானிய மக்கள் நலக் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றன. இதில் தோழமைக் கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்ப் புலிகள் கட்சி ரமணா ரெட்

பிளாக் கட்சி ராமலிங்கம் சாமானிய மக்கள் நலக் கட்சி, கிழக்கு மாவட்ட செயலாளர் சைனி, சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட துணை செயலாளர் தனபால் மற்றும் கோகிலா, பொண்ணம்மாள், எஸ் மாலதி, பாண்டிசெல்வி, ஆர் அமுதா , உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் . இதில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!