Skip to content
Home » திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண் குழந்தைகளும்,ஒரு ஆண் குழந்தையும் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர். சரவணன் குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் குடும்ப தகராறு ஏற்பட்டு கணவன் ,மனைவி இருவரும் இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இடையில் சரவணன் தருமபுரி சென்று விட்டார் .இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் அம்பிகாபரத்திற்கு மீண்டும் வந்த சரவணன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த சரவணன் வீட்டில் உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!