Skip to content
Home » குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் தூக்கிட்டு தற்கொலை….

குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, பாலக்கரை தருமநாதபுரம் அருளானந்த புரத்தை சேர்ந்தவர் சாலமன் ஜோசப் ஆரோக்கியராஜா  (41) . இவருக்கு அருள் மேரி (34) மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சாலமன் ஜோசப் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாலமன் ஜோசப் மனமுடைந்து அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி அருள் மேரி பாலக்கரை போலீஸ் ஸ்டேசனில்புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!