Skip to content
Home » டூவீலர் திருடிய வாலிபர் கைது… திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

டூவீலர் திருடிய வாலிபர் கைது… திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் குருசந்திரன் (30). இவர் துவாக்குடிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15ம் தேதி தனது டூவீலரை கம்பெனி அருகே நிறுத்திவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது டூவீலர் மாயமாகி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குருசந்திரன்  துவாக்குடி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவை ஆய்வு செய்தனர். அப்போது திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணா நகர் சிலோன் காலனியை சேர்ந்த ஹரன்குமார் (19) என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ஹரன்குமாரை துவாக்குடி போலீசார் கைது செய்து அவனிடம் இருந்த  குருசந்திரன் டூவீலரை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் செய்து  திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!