தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவரான கண்மணி பிரியா(33) தேனியில் இருந்து நீலம்பூரில் ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் உறவினரான பேச்சியம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கண்மணி பிரியாவர்மக்கலை பற்றி பயிற்சி எடுக்க செல்வதாக கூறியிருக்கிறார் அதற்காக பேச்சியம்மாளின் கணவர் காந்திபுரம் வரை கொண்டு சென்று விட்டு வந்துள்ளார். இதனை அடுத்து மாலை சுமார் 5:30 மணி அளவில் பேச்சியம்மாளுக்கு போன் செய்து பயிற்சியை முடித்துக்கொண்டு தான் வந்து கொண்டிருப்பதாக சித்த மருத்துவர் கண்மணி பிரியா தெரிவித்துள்ளார். பேச்சியம்மாள் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது நீலம்பூர் அவினாசி சாலையில் அவரது நண்பரான போச்சம்பள்ளியை சேர்ந்த காவலரான ராஜா உடன் இருசக்கர வாகனத்தில்
பின்னால் அமர்ந்து கொண்டு வந்த போது சாலையில் இரு சக்கர வாகனம் சறுக்கியதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரியில் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது ஏறியது. இதில் சக்கரத்தில் சிக்கிய இருவரும் உடல் நசுக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சூலூர் போலீசார் உடனடியாக விரைந்து வந்து கண்மணி பிரியா மற்றும் ராஜா ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டத்திலிருந்து கோவை பயிற்சிக்காக வந்த சித்த மருத்துவர் மற்றும் அவரது உடன் வந்த காவலர் உடல் நசுங்கி உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.