Skip to content
Home » டூவீலரில் இருந்து தவறி விழுந்த விஏஓ பலி…

டூவீலரில் இருந்து தவறி விழுந்த விஏஓ பலி…

  • by Senthil

திருவண்ணாமலை செங்கம் தாலுகா விண்ணவனூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 43). இவர் பெரிய கோலாப்பாடி கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் தனது மகளுடன் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு மகளை சென்னைக்கு பஸ் ஏற்றிவிட்டு அவர் வீட்டுக்கு சென்று திரும்பி சென்றார்.  அய்யம்பாளையம் கூட்ரோடு அருகே செல்லும் போது அதிவேகமாக வேகத்தடையில் ஏறி இறங்கினார். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!