திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் அசார் ( 24) – இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் தில்லைநகர், நீதிமன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 பேருடன் வீலிங் வந்ததுடன் அதனை இன்ஸ்டா மற்றும் யூ-டியூபில் வெளியிட்டு இருந்தார் – அந்த வீடியோவில் சாலையில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் வகையில் அவரது பயணம் அமைந்திருந்தது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சமூக வலைதளங்களில் பதிவிடும் அசார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது – அனுமதி இல்லாமல் கூடி ஊர்வலம் சென்றது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்குவது, மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் திருச்சி செசன்ஸ் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர் – மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அசர் வைத்திருக்கும் பைக்கின் விலை ரூ.20 லட்சம் இருக்கும் என்பதால் பைக் ரைடர்கள் அவர் பின்னால் சுற்று ஆசைப்படுகிறார்கள்.
மாடல் மாடலாக பைக்குகளை வாங்கிக்கொண்டு சாகசம் செய்கிறோம் என்கிற பெயரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சாலையில் செல்லும் பல வயதானவர்களை தள்ளிவிட்டு செல்லும் இது போன்ற இளைஞர்களை பிணையில் வராதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.