Skip to content
Home » செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

  • by Senthil

செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  துப்பாக்கி சூடு நடைபெற்றதை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். திடீர் துப்பாக்கி சூட்டில் சிக்கி 15 மாணவர்கள்  உயிரிழந்தனர். மேலும் 30 பேருக்கு  பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவரும் மாணவர் தான்.  அவரை சுட்டு கொன்றதாக  போலீசார் அறிவித்தனர்.  சம்பவம் நடைபெற்ற பகுதியில் வேறு யாரும் துப்பாக்கியுடன் இல்லை என்பதை உள்துறை மந்திரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!