Skip to content
Home » அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு….. 2பேர் பலி

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு….. 2பேர் பலி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டார். விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தின் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த பகுதியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு வயது 18 மற்றும் 36  இருக்கும். மேலும் 31 வயதான நபருக்கு பலத்த காயமும், நான்கு பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. திடீர் துப்பாக்கி சூடு காரணமாக சிறுமி ஒருவர் காரின் மீது மோதி விபத்தில் சிக்கினார். மேலும் பலர் தள்ளுமுள்ளில் சிக்கி காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!