Skip to content
Home » வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானை குட்டிகளுடன் சாலையைக் கடந்ததால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக யானைகளின் வரவு அதிகமாக உள்ளது தற்போது டிசம்பர் மாதத்தில் துவங்கி மார்ச் மாதம் வரை வால்பாறை பகுதிக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட யானைகள் வந்து செல்வது வழக்கம் தற்போது இந்த ஆண்டு குட்டிகளுடன் அதிக யானை கூட்டங்கள் வந்து செல்கிறது. தற்போது இந்த யானை கூட்டத்தில் பிறந்து 20 நாட்களேயான யானை குட்டி புதிய வரவாக வந்துள்ளது இதனை பொதுமக்கள் ஆர்வமாக காண்பதற்காகவே அதன் அருகாமையில் செல்கின்றனர். குட்டியை பாதுகாக்கும் வகையில் யானைக் கூட்டங்கள் ஆங்காங்கே

முகாமிட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போட்டோ மற்றும் செல்பி எடுப்பதற்காக யானையின் அருகாமையில் செல்வதால் யானை அவர்களை தாக்க முற்படும் நிலை உள்ளது. இதனை வனத்துறை நிர்வாகம் அப்பகுதியில் உள்ள காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வர வண்ணம் பாதுகாத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்ட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!