கோவை மாவட்டம், வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா பொம்மல் பகுதியில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அங்குள்ள ஆற்று பகுதியை சுற்றிப் பார்க்க வந்தனர் இந்நிலையில் அங்கு ஓடுகின்ற குளிர்ச்சியான தண்ணீரை கண்டவுடன் மாணவர்கள்ஆனந்த குளியல் இட்டும் போட்டோ செல்பி எடுத்தும் மகிழ்ந்துள்ளனர். இன்று கூழாங்கல்
ஆற்றுப்பகுதி களை கட்டியது மேலும் அப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை திறக்க கூடாது என வருவாய் துறை மற்றும் நகராட்சி கூறியதன் பெயரில் கடைகள் அடைக்கப்பட்டதால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் சமையல் செய்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடையினர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மீண்டும் அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்க கடைகள் திறக்கப்பட வேண்டும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்