Skip to content
Home » வேங்கைவயல் கிராமத்தில் நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்கு சேகரிப்பு

வேங்கைவயல் கிராமத்தில் நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்கு சேகரிப்பு

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  ஜல்லிக்கட்டு ராஜேஷ்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  அவர்  தொகுதி முழுவதும் சூறாவளி  பிரசாரம் செய்து மைக் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.  இன்று அவர் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்திற்கு  பிரசாரம் செய்ய  சென்றார். வேங்கை வயல் கிராம மக்களின் அழைப்பை ஏற்று  அங்கு சென்ற வேட்பாளர்  ராஜேஷ்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

வேங்கை வயல் கிராமத்தில் ஏற்கனவே பல பிரச்னைகள்  உள்ளதால்,  போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.     இங்கு பி்ரசாரத்திற்கு சென்றால்  ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.  பிரச்னைகள் ஏற்படலாம் என போலீசார் கூறினார். ஆனாலும் ராஜேஷ் அங்கு சென்று ஆதரவு கேட்டார். அந்த கிராம மக்கள்  ராஜேஷ்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்து  வரவேற்றனர்.  இந்த வாக்கு சேகரிப்பில் சாட்டை துரைமுருகன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!