கரூர் பேருந்து நிலையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் 264-வது பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாக ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்ற இந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் திடீரென இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்தனர்.
அதைத் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை ஓட்டியதால் பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்தனர். தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக இளைஞர்களும் போலீசார் உடன் வாக்குவாதம் செய்தனர். அதைத்தொடர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிகளவில் குவிந்ததால் லேசான தடியடி நடத்தினர்.
மேலும் தொடர்ந்து வந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் முற்றி தடியடி நடத்தின பேருந்து நிலைய அருகே பரபரப்பு நிலவியது இரு சக்கரத்தில் வாகனத்தில் வந்த பொதுமக்கள் அலறடித்து ஓடினர்,இதனால் அப்பகுதியில் போர்க்களம் போல் காட்சி அளித்தது,மேலும் பணியில் இருந்த பெண் போலீசார் தாக்குதலில் காயமுற்றதாக கூறப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தஅதிரடிப்படை வீரர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.