Skip to content
Home » கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா…

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார்.

இந்நிலையில் இன்று கல்யாண வெங்கட்ரமண சுவாமி யானை வாகனத்தில் திருவீதி விழா காட்சி

அளித்தார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்தனர்.

பின்னர் ஆலய மண்டபத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க யானை வாகனத்தில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருவீதி உலா காட்சியளித்தார்.

ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி யானை வாகன திருவீதி உலா காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு ஆலயம் வந்த கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதை தொடர்ந்து அனைவருக்கும் பக்தர்களுக்கும் துளசி, மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!