Skip to content
Home » வெறித்தனமாக உருவாகும் ”தங்கலான்”…

வெறித்தனமாக உருவாகும் ”தங்கலான்”…

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டாக உருவாகும் ‘தங்கலான்’ படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது. ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படம் உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

Thangalaan

வித்தியாசமான கதைக்களத்துடன் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வெளியாகவிருக்கிறது.  சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

Thangalaan

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

Thangalaan

கேஜிஎப் பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் காட்சி ஒன்றை விக்ரம் பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் காட்சிகள் அனைத்து வெறித்தனமாய் உள்ளது. எப்போதும் தனது படங்களுக்காக கடின உழைப்பை கொட்டும் விக்ரம், இந்த படத்திலும் அதுபோன்று பணியாற்றி வருவது தெறிகிறது. வித்தியாசமான தோற்றம், போர்க்கள காட்சிகள், காட்சியமைப்பு என அனைத்துமே தங்கலான் படத்திற்கு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மொத்தத்தில் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!