கொடூரமான கொரோனா ஏராளமானவர்களை உயிர்பலி வாங்கியது. அந்த நேரத்திலும் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என பலர் அரசு பணத்தை வாரி சுருட்டினர். நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு, மற்றும் மருந்துகள், கிருமிநாசினி போன்றவை கொள்முதல் செய்ததில் கோடி கோடியாக கொள்ளையடித்தனர்.அந்த நபர்களை கண்டுபிடித்து இப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் ஆர்.எம்.காலனியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி இருந்தபோதுகொரோனா காலத்தில் கிருமி நாசினி வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள மகேஸ்வரியின் வீடு மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.