கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் கட்டப்படும் பாலத்தின் அடியில், சிவசேனா கட்சியின் கேரளம் மாநில தலைவரான அதுல் (32) என்பவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காரில் ரத்தக்கறை இருந்ததும், ஒன்றுக்கும் மேற்பட்டோர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்பதையும் உறுதிப்படுத்தியது. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள சிவசேனா தலைவர் சரமாரி வெட்டிக்கொலை-பரபரப்பு சம்பவம்
