மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மினி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதியில் மினி பேருந்துகளையும் நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் மினி பேருந்துகளை நிறுத்த விடாமல் தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் பேருந்து நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
