Skip to content
Home » விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

தென் மாவட்டங்கான நெல்லை, தூத்துக்குடி,  குமரி,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கும்   மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு  உள்ளது. இந்த நிலையில் இப்போது விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 21 செமீ மழை பெய்வதாகும். இதனை அதி கனமழை என்றும் வானிலை மையம் குறிப்பிடுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!