Skip to content
Home » விருப்ப பணிஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுவிழா…

விருப்ப பணிஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுவிழா…

தஞ்சாவூர் மாவட்டம், குளிச்சப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முருகானந்தம். அவர் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா தஞ்சை வட்டார கல்வி அலுவலர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக குளிச்சப்பட்டு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் இளவரசி கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி, முன்னாள் தலைமை ஆசிரியர் ஓய்வு நடராஜன், ஆசிரியர்கள் அசோகன்,வெங்கடேசன், சுரேஷ்குமார், கோகுல், ரேணுகா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர் முருகானந்தம் ஏற்புரை வழங்கினார். பின்பு பள்ளி மாணவ, மாணவிகள், நடனங்கள் பாட்டுக்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி பிரியாவிடை கொடுத்தனர். இடைநிலை ஆசிரியர் சுகந்தி நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!