Skip to content
Home » சென்னையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

சென்னையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

சென்னை ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எஃப் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற நிலையில் 2 பேரும் உயிரிழந்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!