Skip to content
Home » குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

டில்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன்அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் மனைவி மற்றும் 15 வயது மகளுடன் பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.

இதில், அந்த சிறுமியின் கையை பிடித்து, சோனி முறுக்கியுள்ளார். உடனடியாக சிறுமியை ஹெட்ஜ்வார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிறுமிக்கு எக்க்ஸ்-ரே எடுத்துள்ளனர். தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதன்பின்பு, சிறுமியும், தாயும் வீட்டுக்கு வந்தனர். அதன்பின் சோனி மற்றும் சத்பீருடன் மீண்டும் அவர்கள் வாக்குவாதம்  செய்தனர்.  இந்த முறை, சிறுமி கத்தி ஒன்றை எடுத்து வந்து சோனியை வயிற்றில் குத்தியுள்ளார்.  இதில், சோனி பலத்த  காயமடைந்தார்.  உடனடியாக சோனியை  ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை நேற்று கைது செய்தனர். அவர் சிறுவர் சீர்திருத்த வாரியத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் கூறியுள்ளனர். குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயது சிறுமி கத்தியால் குத்தி, படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில்  அதிர்க்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!