Skip to content
Home » மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.(38)இவருக்கும் கீர்த்திகா (29) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றிய கலைவாணன் கடந்த மாதம் விடுமுறையில் ஊர் திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்த கலைவாணன் தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டு உள்ளார். அப்போது கீர்த்திகா கணவன் அனுப்பிய பணத்தை தனது தந்தை வீட்டிற்கும், கணவரின் உறவினர்களுக்கும் கொடுத்ததுடன் ஊதாரித்தனமாக செலவு செய்ததும் தெரியவந்தது.

இதனால் கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை கலைவாணன் தனது மனைவி கீர்த்திகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கலைவாணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!