Skip to content
Home » மனைவி கடப்பாரையால் அடித்து கொலை….. தஞ்சை எல்ஐசி முகவர் வெறிச்செயல்

மனைவி கடப்பாரையால் அடித்து கொலை….. தஞ்சை எல்ஐசி முகவர் வெறிச்செயல்

தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் அருகேயுள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் சேவியர். இவர் எல்ஐசி முகவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அல்போன்சா, மகள் சௌமியா.

லாரன்ஸ் சேவியர் தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்தை அவருக்கு தெரியாமல் விற்று விட்டதாக கூறப்படுகிறது. இத்தகவல் தெரிய வந்ததையடுத்து அல்போன்சா நேற்று இரவு தனது கணவர் லாரன்ஸ் சேவியரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த லாரன்ஸ் சேவியர் கடப்பாரையால் அல்போன்சாவின் தலையில்  ஓங்கி அடித்தார். இதனால்  மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில்  அல்போன்சா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீசார் லாரன்ஸ் சேவியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!