டில்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிச்சந்த் ஜோடி அபார வெற்றி பெற்றது. உலகின் 4ம் நிலை சீன ஜோடியான ஜியா யி ஃபான் – ஜாங் ஷு சியான் ஜோடியை 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் உறுதி செய்துள்ளது.
