Skip to content
Home » முதியவரின் கழுத்தை நெறித்து கொன்ற வாலிபர் … எஸ்கேப்…. பெரம்பலூரில் பரபரப்பு

முதியவரின் கழுத்தை நெறித்து கொன்ற வாலிபர் … எஸ்கேப்…. பெரம்பலூரில் பரபரப்பு

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வடக்கு மாதவி பகுதியைச் சேர்ந்தவர்  நாராயணன் (80 ). இவரின் வயலும் ராமமூர்த்தி (24) வயலும் அக்கம் பக்கத்தில் உள்ளது. இருவரும் வரப்பில் மாடு மேய்க்கும் பொழுது இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இறந்து போன நாராயணன் வரப்பில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது  ராமமூர்த்தியின் வயலில் எதற்கு மாடு மேய்கிறாய் எனக் கூறி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ராமமூர்த்தி நாராயணனின் கழுத்தை பிடித்து நெறித்துள்ளார் அதனை தூரத்தில் இருந்து பார்த்த நாராயணன் மனைவி அழகம்மாள் விடுடா என கூறிக் கொண்டே ஓடிவந்துள்ளார், இதற்குள் நாராயணன் மயக்கம் போடவே கீழே விட்டுவிட்டு ராமமூர்த்தி ஓடிவிட்டார். அழகம்மாள் வந்து பார்த்தபோது பேச்சு மூச்சு இல்லாமல் நாராயணன் கிடக்கவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் கூறி அவர்கள் வந்து பார்த்து நாராயணன் இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர் பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராமமூர்த்தி ஓட்டம் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!