திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் அருகே இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே உள்ள வடக்கு இடையபட்டி பகுதியில் மண்டி கடை வைத்து நடத்தி வருபவர் கணவாய் பட்டியைச் சேர்ந்த தினேஷ் . இவர் இரவு அவரது கடைக்கு முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தினேஷின் கடை முன்பு நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடி செல்கிறார் . மற்றொரு இளைஞர் சாலையில் நின்று யாரும் வருகிறார்களா என நோட்டமிருக்கிறார்.
பின்பு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று விடுகின்றனர். இருசக்கர வாகனம்
திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
