Skip to content
Home » 1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…. தஞ்சையில் 2 பேர் கைது….

1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…. தஞ்சையில் 2 பேர் கைது….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்துவதாக தனி படையினருக்கு கிடைத்த தகவலின் படி தஞ்சையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லாரியில் சோதனை செய்தபோது அதில் 285 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்ட காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த மதுரையை சேர்ந்த ஹல்க் கார்த்தி, தென்காசியை சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!