Skip to content
Home » ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

சென்னையில் சி.டி.எஸ் நிறுவனம் கட்டடம் கட்ட ரூ.12 கோடியில் லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-2016 காலகட்டத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி வழங்க சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.  அதன் அடிப்படையில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள், லஞ்சம் கொடுத்த அப்போதைய சி.டி.எஸ், எல்&டி நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!