சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொது நூலக இயக்கம் சார்பில் முதன் முறையாக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் , பொது நூலக இயக்குநர் இளம்பகவத்,
சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் , இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொது நூலக இயக்கம் சார்பில் மேலும் வௌிப்படை தன்மையான நூல் கொள்முதல் இணையதளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மகேஷ்.