Skip to content
Home » 2ம் கட்டத் தேர்தல்….கேரளா உள்பட 88 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

2ம் கட்டத் தேர்தல்….கேரளா உள்பட 88 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Senthil

18வது மக்களவைக்கான  தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் தமிழ்நாடு, புதுவை உள்பட  மொத்தம் 102 தொகுதிகளில்  வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.   இந்த நிலையில் இன்று 2ம் கட்டத் தேர்தல்  89 தொகுதிகளில் நடக்க இருந்தது.  மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கிய  வாக்குப்பதிவு 88 தொகுதிகளிலும் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3),  மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 14 தொகுதிகளில் மொத்தம் 247 வேட்பாளர்கள்களத்தில் உள்ளனர். இதில் 26 பேர் பெண்கள் . மத்திய பிரதேசத்தின் 7 தொகுதிகளில் 80-க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு பா.ஜனதா, காங்கிரஸ், இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் முதற்கட்ட தேர்தலில் 12 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 13 இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது.

இந்த தொகுதிகளில் 152 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, 2 மத்திய மந்திரிகள், பா.ஜனதா மாநில தலைவர் என முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இங்குள்ள ஜலோர் தொகுதியில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் களத்தில் உள்ளார். இதைப்போல பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் சிங் போட்டியிடும் ஜலாவர்-பரான் தொகுதியும் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
கேரளாவில்  காலை 9 மணி வரை 8.52 சதவீதம் வாக்குப்பதிவானதாக  தகவல் கிடைத்துள்ளது.

கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில்  ராகுல் காந்தி போட்டியிடுகி்றார். இங்கு 2 தினங்களுக்கு முன்  மாவோயிஸ்ட்கள்  மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  கர்நாடகாவில்  14  மக்களவை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு காலை 9 மணி வரை 9.21 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!