Skip to content
Home » 6 மாவட்டத்தில் அதி கனமழை, திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் கனமழை பெய்யும்…

6 மாவட்டத்தில் அதி கனமழை, திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் கனமழை பெய்யும்…

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6 மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!