Skip to content
Home » 7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

  • by Senthil

இஸ்ரேல் மீது,  பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தி  ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததுடன், 200 பேரை கடத்திச்சென்றது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.  இதற்கிடையே பணய கைதிகளை விடுவிப்பதற்காக  7 நாட்கள் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்திருந்தது. ஆனாலும் முழுவதுமாக பணய கைதிகள்   விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று   மீண்டும்   இஸ்ரேல் போர் தொடங்கியது.   பாலஸ்தீனத்தின்  ரபா நகரை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  ஆனாலும் கத்தார் நாடு மூலம்  போர் நிறுத்த முயற்சிகளும் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!