Skip to content

ஈரோடு கிழக்கு காங். வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு…. அழகிரி தகவல்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மரணமடைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் அங்கு மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும். அது எங்களுடைய தொகுதி  என்று இன்று மதியம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.  வேட்பாளர் 3 நாளில் அறிவிப்போம். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை  இன்று மாலை முதல் சந்தித்து பேசுவேன் . நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு எங்களுக்கு வெற்றியை தேடித்தாருங்கள் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!