Skip to content

மேட்டூரில் 11ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ

“காவிரி டெல்டாவில் குறுவை  பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மேட்டூர் அணையில் விதைகள், மலர்களை தூவி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடுகிறார்.

இதற்காக முதல்வர் ஸ்டாலின் 11ம் தேதி மாலையே மேட்டூர் வருகிறார். அன்றைய தினம் அவர் மேட்டூரில் பொதுமக்களை சந்திக்கிறார்.  நவப்பட்டி பெரும்பள்ளம் பகுதியில் இருந்து  முதல்வர்  11 கி.மீ. தூரம்  ரோடு ஷோ நடத்தி  மக்கைள சந்திக்கிறார்.  பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில்  முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.  இந்த தகவலை ற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

 

error: Content is protected !!