Skip to content

கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

குளித்தலை அருகே பில்லூரில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பில்லூரில் பெரிய ஏரி குளத்தில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த மீன் பிடிக்க திருவிழாவானது ஊர் முக்கியஸ்தர்கள் சார்பில் வெள்ளைத்துண்டை விசிறி மீன்பிடித் திருவிழாவினை துவக்கி வைத்தார். மீன்பிடி திருவிழாவை

முன்னிட்டு பில்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்பிடி வலையில் பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். இதில் ஜிலேபி, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல வகையான மீன்களை பொதுமக்கள் பிடித்து சென்றனர்.

error: Content is protected !!