கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலமுருகன் (45) இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு சந்தோஷ் (9), கஜேந்திரன் (5) சரோஜா (4) ரோஷினி (3) என்கிற நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகனுக்கு சிகிச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பச்சையம்மாளின் சித்தப்பா மகனான திண்டிவனத்தை சேர்ந்த சேர்ந்த ஜீவா என்பவர் கே.ஆடூருக்கு வந்து பச்சையம்மாள், சந்தோஷ், சரோஜா, ரோஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு சென்று அவர் வீட்டில் வைத்துள்ளார்.
அதன்பேரில் கடலூர் டிஎஸ்பி ரூபன் குமார் மேற்பார்வையில் புதுநகர் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கவியரசன் பிரசன்னா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்த குழந்தை ரோஷினியின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்தது. அதில் இறந்துபோன சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது. மேலும் பாலியல் தொந்தரவு செய்து, கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருவண்ணாமலை சென்று அங்கு தலைமறைவாக இருந்த வெங்கடேசன் மகன் ஜீவாவை (25) கைது செய்து கடலூருக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் குமந்தான்மேடு சோதனை சாவடி அருகில் சிறுநீர் கழிக்க போவதாக ஜீவா போலீசாரிடம் கேட்டுள்ளார். இதனால் போலீசார் அவரை வேனிலிருந்து இறக்கி விட்டனர். அப்போது ஜீவா திடீரென பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். இதில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது போலீசார் ஜீவாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் தொந்தரவு செய்து சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.