Skip to content

பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலமுருகன் (45) இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு சந்தோஷ் (9), கஜேந்திரன் (5) சரோஜா (4) ரோஷினி (3) என்கிற நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகனுக்கு சிகிச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பச்சையம்மாளின் சித்தப்பா மகனான திண்டிவனத்தை சேர்ந்த சேர்ந்த ஜீவா என்பவர் கே.ஆடூருக்கு வந்து பச்சையம்மாள், சந்தோஷ், சரோஜா, ரோஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு சென்று அவர் வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில் பாலமுருகனின் உறவினர்களை கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடர்பு கொண்ட ஜீவா தான் வீட்டில் இருந்த ரோஷினி மயக்கம் அடைந்து கீழே விழுந்து இறந்து விட்டதாகவும் எனவே பச்சையம்மாள் இறந்த ரோஷினியுடன் கடலூருக்கு பஸ்ஸில் வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் கடலூர் பேருந்து நிலையத்திற்கு வந்து பச்சையம்மாளின் வருகைக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் அவர் அங்கு வரவில்லை. இதனால் பாலமுருகன் உறவினர்கள் கடலூர் பகுதியில் தேடிப் பார்த்தபோது பச்சையம்மாள் கடலூர் உழவர் சந்தை அருகே குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த குழந்தை உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்தது. இதனால் பாலமுருகனின் உறவினர்கள் பச்சையம்மாளை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை பார்த்த போலீசார் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து எனவே தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கடலூர் டிஎஸ்பி ரூபன் குமார் மேற்பார்வையில் புதுநகர் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கவியரசன் பிரசன்னா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்த குழந்தை ரோஷினியின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்தது. அதில் இறந்துபோன சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது. மேலும் பாலியல் தொந்தரவு செய்து, கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருவண்ணாமலை சென்று அங்கு தலைமறைவாக இருந்த வெங்கடேசன் மகன் ஜீவாவை (25) கைது செய்து கடலூருக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் குமந்தான்மேடு சோதனை சாவடி அருகில் சிறுநீர் கழிக்க போவதாக ஜீவா போலீசாரிடம் கேட்டுள்ளார். இதனால் போலீசார் அவரை வேனிலிருந்து இறக்கி விட்டனர். அப்போது ஜீவா திடீரென பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். இதில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது போலீசார் ஜீவாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் தொந்தரவு செய்து சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!