Skip to content

கரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை..

கரூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். கரூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கரூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிலை தொடர்பான மாநகராட்சிக்கு உரிய பராமரிப்புத் தொகை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு சிலை அமைப்பது தொடர்பான திமுக கோரிக்கை குறித்தும் மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தண்டபாணி பேசுகையில், புதிய பேருந்து நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை வைக்க வரவேற்பு தெரிவித்து பேசினார்.

error: Content is protected !!