Skip to content

சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண், நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு தனியார் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் மருத்துவக் குழுவினர் பரிசோதித்தபோது, பெண் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!