தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. வாக்காளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஒரு சின்ன பிரேக் என, கடைகளில் டீ குடித்து வருகின்றனர். அந்தவகையில் திருச்சி காந்தி மார்கெட்டில் முதல்வர் ஸ்டாலின் இன்று

காலை வாக்கிங் செய்தார். அப்போது ஒரு டீ கடையில் அமர்ந்து டீ அருந்தினார். உடன்



அமைச்சர்கள், கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், நிர்வாகிகள்


உடனிருந்தனர். பொதுமக்கள் உற்சாகம் வரவேற்பு அளித்தனர். மேலும் முதல்வர் ஸ்டாலினிடம்

செல்பியும் எடுத்துக்கொண்டனர். முதல்வர் ஸ்டாலினை பெண்கள் கையெடுத்து கும்பிட்டு வரவேற்றனர். மேலும் பெண்கள் முதல்வரிடம் உதவித்தொகைக்கு நன்றி தெரிவித்தனர்.

