திருச்சி தனியார் மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த சம்பத் குமார் அவரை மனைவி கவிதாவை வீட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கவிதா சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு சென்ற சம்பத் சரமாரியாக குத்திக்கொலை செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து கத்திக்குத்து கொடூரங்களால் அதிர்ச்சி அளிக்கிறது.
