திருச்சி மாவட்டம், கொளக்குடி சிவந்திபட்டி சாலையில் நேற்று வடக்கு அரங்கூர் பகுதி பரத் என்பவர், பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில், சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவத்தில் சென்று, உடலை கைப்பற்றி முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின் டிராக்டர் டிரைவர் பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
