ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியின் புதிய பேருந்து நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால், அங்குள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய ஜம்மு-காஷ்மீர்…
